Archive for the ‘உலகளாவிய கவிதைப்போட்டி’ Category

செம்மொழி இலச்சினையில் ஏன் நமிதாவை போடவில்லை?

ஜூன் 26, 2010

செம்மொழி இலச்சினையில் ஏன் நமிதாவை போடவில்லை?

செம்மொழி இலச்சினையில் ஏன் நமிதாவை போடவில்லை? நக்கீரன் கோபால் இப்படி ஒரு கேள்வி கேட்டுள்ளார், 26-06-2010 அன்று மாலையில் நடந்த பட்டிமன்றத்தில்! நமிதா என்றதும் பலரின் முகங்கள் மாறியது நன்றாகவே தெரிந்தது. மனங்களில் உறுத்திக் கொண்டிருப்பது வெளிப்பட்டு விடும். கிட்டத்தட்ட, இது ஒரு திமுக உறவினர்கள், அபிமானிகள், என்ற மிகவும் நெருக்கமானவர்கள் எல்லோரும் கலந்து கொண்டுள்ள மாநாட்டுக் கூட்டம் என்பதனால், பழக்கமானவர்களுக்கு, ஏதோ பொதுக்குழு அல்லது முக்கியமான விஷயத்தை பேச வந்துள்ளது போன்ற உணர்வு ஏற்பட்டு விட்டது.

கருணாநிதியை சந்திக்கும் போது ரஞ்சிதா புகழ் லெனின் இருந்தது: அதுமட்டுமல்லாது, லெனினிற்கும் தனக்கும், ஒருவேளை கருணாநிதிக்கும் உள்ள தொடர்பு அல்லது சந்திப்புப் பற்றிய விவரத்தையும் போட்டு உடைத்துவிட்டார். ஆமாம், விழா மலரை கருணாநிதிக்குக் கொடுக்கும்போது, கூட லெனினும் வந்ததாகக் குறிப்பிட்டது ஆச்சரியமே. இந்த லெனிந்தான் அந்த லெனின் என்றால், அவன் எப்படி காணாமல் போயிருக்கமுடியும்? அப்படி புளூ ஃபிளிம் எடுக்கும் ஆள் எப்படி, ஒரு மாநில முதலமைச்சருடன் அத்தகைய நெருக்கமான உறவு கொண்டிருக்க முடியும்?

“நித்து” என்று ஜொல்லுவிடும் கோபால்: ஆமாம், “நித்து” என்று செல்லமாகக் குறிப்பிட்டு, தனது அடக்கமுடியாதத் தன்மையை செம்மொழி மாநாட்டில் கோபால் பேசியதும் இயற்கையே. “நித்து” என்ற நித்யானந்தா என்று குறிப்பிட்டு, அவர் ரஞ்சிதாகூட என்னெவெல்லாம் செய்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றதும், பின்னால் பலருக்கு குஷியாகி விட்டது. யாரோ ஒரு உற்சாகத் தொண்டர், வீடியோ போட்டு காண்பி என்ற கத்தவும் செய்தார்.

கொலைகாரர்கள், கிறுக்குகள், வயதானவர்கள், குழப்பவாதிகள் இவர்கள் எல்லோரும் மாநாட்டில் கலந்து கொண்டு என்ன செய்யப்போகிறார்கள்?

ஜூன் 16, 2010

கொலைகாரர்கள், கிறுக்குகள், வயதானவர்கள், குழப்பவாதிகள் இவர்கள் எல்லோரும் மாநாட்டில் கலந்து கொண்டு என்ன செய்யப்போகிறார்கள்?

திருவள்ளுவரை வைத்துக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கு, இதோ உதாரணங்கள். ஆங்கிலத்தில் “ஜிம்மிக்” என்பார்கள், அதாவது விளம்பரத்திற்க்காக, இப்படி விசித்திரமான, வேடிக்கையான வேலைகளை எல்லாம் செய்வது. இதில் உற்சாகத்துடன் ஈடுபட்டுள்ளவர்கள் செய்கிறார்களா அல்லது தமது பெயர் வரவேண்டும் என்ற நோக்கில் செய்கிறார்களா என்று பார்த்தால், திருவள்ளுவரை வைத்துக் கொண்டு தாம் புகழ் பெறவேண்டும் என்ற நோக்குதான் தெரிகின்றது.

ஆனால், அதே நேரத்தில், திருவள்ளுவரை, திருக்குறளை மற்றவர்களும், இதே மாதிரி, தமக்கு சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்கிறார்கள்.

திருக்குறளை விற்று வியாபாரம் செய்தால் பணம்: ஷேக் மைதீன் என்பவர், திருக்குறள் புத்தகங்களை விற்று, அதில் கிடைக்கும் லாபத்தை பகிர்ந்து கொடுப்பதாக கூறி, நூற்றுக்கணக்கானோரிடம் 10 ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு பெற்று ஏமாற்றினார்.  இதில்தான் வேடிக்கை! எப்படித்தான் நமது தமிழர்கள் இப்படியேல்லாம் ஏமாந்து கோடிகளில் பணம் கொட்டுகிறார்களோ தெரியவில்லை. அதாவது, திருவள்ளுவரை வைத்துக் கொண்டு, கருணாநிதி, கணபதிஸ்தபதி முதலியோர்தாம் வியாபாரம் செய்யவேண்டும் என்பதில்லை, ஷேக் மைதீனும் மோசடி செய்து கோடிகளை அள்ளலாம்!

முகமது அலி ஜின்னா, திருக்குறள் ஆராய்ச்சிற்கு பணம் பெற்றுள்ளார்: ஷேக் மைதீன் இப்படியென்றால், இன்னொரு முகமது அலி ஜின்னா, செம்மொழி ஆராய்ச்சி கழகத்திலிருந்து ஆராய்ச்சி செய்ய பணத்தைப் பெற்றுள்ளார்.

அதுமட்டுமல்லாது, திருக்குற்ளை, திருவள்ளுவரை ஆராய்ச்சி என்ற போர்வையில் கேவலப்படுத்தியிருக்கிறார்கள், அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள், தூஷித்திருக்கிறார்கள்

அதையும் இந்த உற்சாகமுள்ள இளைஞர்கள் அறிந்து கொள்ளவேண்டும், அத்தகைய எத்ரிகளை இனங்கண்டுகொண்டு ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், சித்தாந்த ரீதியில் அவர்களை எதிர்த்துப் போராடவும் வேண்டியுள்ளது.

செம்மொழி மாநாட்டையொட்டி, சாக்பீசில் தான் உருவாக்கிய 133 மில்லி மீட்டர் உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையுடன் கோவையைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் (நன்றி – தினமலர் 23-06-2010).

செம்மொழி மாநாட்டில் வாய்ப்பு கேட்டு வள்ளுவர் வேடமிட்டு போராடியவர் கைது!

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=19944

பதிவு செய்த நாள் : ஜூன் 15,2010,23:25 IST

சென்னை : செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள தன்னை நிராகரித்ததை எதிர்த்து, திருவள்ளுவர் வேடமிட்டு உண்ணாவிரதம் இருந்தவரை போலீசார் தடுத்து, போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

அரக்கோணம், கிரீப் பேட்டை, சாய்நகர் 2வது தெருவை சேர்ந்த திருமூர்த்தி மகன் முரளி (27). சென்னை, லயோலா கல்லூரியில் தமிழ் பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், கின்னஸ் சாதனைக்காக பல்வேறு நிகழ்வுகளை செய்து வருகிறார். ஏற்கனவே 72 மணி நேரம் தொடர் பேச்சு, 60 மணி நேரம் தொடர்ந்து நடனம், 112 மணிநேரம் தொடர்ந்து பாடுதல், 15 நிமிடங்களில் 15 வேடங்களில் வந்து அசத்துதல் உள்ளிட்ட 6க்கும் மேற்பட்ட சாதனைகளை செய்து கின்னஸ் சாதனைக்கு அனுப்பியுள்ளார். இவர் நேற்று காலை 11 மணியளவில், சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை எதிரில் திருவள்ளுவர் வேடமணிந்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். திருவல்லிக்கேணி போலீசார் சம்பவ இடம் சென்று, அனுமதியின்றி உண்ணாவிரதம் நடத்த முடியாதென்று கூறி, கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

விசாரணையில், கடந்த மாதம் 28ம் தேதி சென்னை அறிவாலயத்தில் திருக்குறளில் உள்ள 1,330 குறள்களுக்கும் நடன வடிவில் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இந்நிகழ்ச்சியை முதல்வர் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின் முடிவில், முரளியை பாராட்டிய அவர், செம்மொழி மாநாட்டில் இந்த திறமையை காட்டலாமே என்று யோசனை தெரிவித்துள்ளார். இதையடுத்து, முரளி தமிழக கலை பண்பாட்டுத்துறை அதிகாரி மணி என்பவரை தொடர்பு கொள்வதற்காக பல முறை சென்றும் முடியவில்லை. இறுதியில், அங்குள்ள அதிகாரிகள் செம்மொழி மாநாட்டில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கான இறுதி பட்டியல் வந்துவிட்டதாகவும், இனி கலந்து கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால், விரக்தியடைந்து இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

திருவள்ளுவர் உருவத்தில் திருக்குறள்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23992

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2010,00:36 IST

கோவை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, திருவள்ளுவர் உருவத்தில், 1,330 திருக்குறளை எழுதியுள்ளார், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த துளசி. நான்கரை அடி உயரமும், 133 செ.மீ., அகலமும் கொண்ட தாளில், திருவள்ளுவரின் உருவில், தலை முதல் கால் வரை திருக்குறள் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு அதிகாரத்திற்குரிய 10 குறள்கள் எழுதப்பட்டிருக்கும். துளசி, இந்தி டியூஷன் வகுப்புகள் எடுக்கும் ஆசிரியை. தமிழ் மேல் உள்ள ஆர்வத்தில் இது போன்ற நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

துளசி கூறியதாவது: தமிழ் மீதுள்ள பற்றால், 3.5 செ.மீ., அகலம், 4.5 செ.மீ., உயரம் கொண்ட சிறிய திருக்குறள் புத்தகத்தை தயாரித்துள்ளேன். இது, 133 பக்கங்களை கொண்டது. ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு அதிகாரம்; அதில், 10 குறள்கள் இடம் பெற்றிருக்கும். தவிர, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு நூலை, படம் வரைந்து அதில் எழுதியுள்ளேன். காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வரைந்து, தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாள மொழிகளில் எழுதியுள்ளேன். தொடர்ந்து தமிழ் மேல் உள்ள பற்றை வெளிப்படுத்த, பல்வேறு சாதனைகள் செய்ய முயற்சித்

22 ஆயிரம் சதுரடி; 2200 மாணவர்கள் பிரமாண்ட திருவள்ளுவர் உருவம்http://www.dinamalar.com/News_Detail.asp?Id=23979

பதிவு செய்த நாள் : ஜூன் 22,2010,00:10 IST

சென்னை : உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு 22 ஆயிரம் சதுரடியில் 2,200 மாணவர்கள் ஒன்று சேர்ந்து, திருவள்ளுவரின் பிரமாண்டமான தோற்றத்தை உருவாக்கினர். சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிகுலேசன் பள்ளியில், நடந்த இந்த சாதனையில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி மைதானத்தில் திருவள்ளுவரின் முகமூடி அணிந்து, “செம்மொழியாம் தமிழ் மொழி’ எனும் வாசகத்தை மையப்படுத்தி இந்நிகழ்ச்சி நடந்தது.இதுதவிர, ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம் – சிலம்பு, மணிமேகலை – இடையணி (ஒட்டியானம்), சீவகசிந்தாமணி – மணிமாலை, வளையாபதி – வளையல், குண்டலகேசி-குண்டலம் என ஐந்து மாணவியர் ஆபரணங்களை அணிந்து வந்து அசத்தினர். பண்டைய தமிழர்களின் வாழ்க்கை முறையான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற ஐந்திணையை மையப்படுத்தி முறையே, குறவர்,ஆயர், உழவர், மீனவர், கொள்ளையர் வேடமணிந்து, தமிழ் விழாவைக் கொண்டாடினர். தமிழின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்த கண்காட்சியும் நடந்தது.

கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஆட்டோ சங்கர் கூட்டாளி உள்பட 6 கைதிகளுக்கு அழைப்பு!
ஞாயிற்றுக்கிழமை, மே 2, 2010, 11:03 [IST]

ஆட்டோ சங்கர் என்பவன் ஒரு பலான விபச்சாரத்தொழில் செய்தவன்,பல கொலைகலைச் செய்தவன், ……………..1988ல் இவனைப் பற்றி செய்தித் தாள்களில் அதிகமாக செய்திகால் வெளிவந்து கொண்டிருக்கும்.

அவனது லிஸ்டில் இருந்த விபச்சாரிகள் யார், யார்………..எந்தெந்த அரசியல்வாதிகள் சிக்கியுள்ளனர், என்றெல்லாம் செய்திகள் வரும்.

குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டான்.

குற்றங்களில் துணை போன பலர் – அவனது தம்பி மோகன், மைத்துனன் எல்டின் என்கிற ஆல்பர்ட், கூட்டாளிகள் சிவாஜி, ஜெயவேலு, செல்வராஜ், தாமன் என்கிற ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ……இருந்தனர்.

சாவதற்கு முன்பு, கிருத்துவன் ஆனான், ஆனால், ஏற்கெனவே கிருத்துவனந்தான் என்றும் சொல்லப் பட்டது! எப்படியாகிலும், கிருத்துவர்களும் அதில் புகழ் பெற்றனர்!

நெல்லை: கோயம்புத்தூர் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு இலக்கிய ஆய்வுக் கட்டுரை அனுப்பிய பாளை மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதிகள் ஆறு பேருக்கு மாநாட்டில் நோக்கர்களாக பங்கேற்க சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உலக தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி இலக்கிய ஆய்வு கட்டுரை, கவிதை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய ஆய்வு கட்டுரை போட்டியில் பாளை மத்திய சிறையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிகள் ஆட்டோ செல்வராஜ், சூசை மரியான், கல்கி மோகன், அய்யங்கனி, கிருஷ்ணன், ரமேஷ், பங்கேற்றனர்.

ஆனல், எத்தனை தகுதியானவர்களுக்கு அழைப்பு இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்: இவர்கள் இலக்கிய ஆய்வு கட்டுரை எழுதி உலக தமிழ் செம்மொழி மாநாட்டு குழுவிக்கு கடந்த மார்ச்சில் அனுப்பி வைத்தனர். இவர்கள் அனுப்பிய கட்டுரை குறித்து பரிசீலனை நடந்தது. இதற்கிடையில் இவர்கள் 6 பேருக்கும் மாநாட்டில் நோக்கர்களாக பங்கேற்க அழைப்பு விடுத்து இருக்கை எண் குறிப்பிட்டு மாநாட்டு குழு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிறைத்துறை தலைவர் அனுமதி பெற்று 6 பேரும் முந்தைய நாள் கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடுத்த நாள் மாநாட்டில் பங்கேற்க போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படுவர் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆட்டோ சங்கரின் கூட்டாளி: ஆய்வு கட்டுரைகளை செம்மொழி மாநாட்டு குழுவிற்கு அனுப்பிய 6 பேரும் இலக்கிய அறிவு நிரம்பியவர்கள் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆட்டோ செல்வராஜ் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை குற்றவாளி ஆட்டோ சங்கரின் கூட்டாளி ஆவார். இவர் பிஏ பட்டதாரி. ஆயுள் தண்டனை பெற்று 22 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இதேபோல கைதி, கல்கி மோகன் ஓவியங்கள் வரைவதில் நிபுணராம். ஆறுபேரும் சிறையில் நடக்கும் கவிதை, கதை, கட்டுரை போட்டிகளில் பலமுறை பங்கேற்று பரிசுகள் பெற்றவர்கள். தமிழக அளவில் இலக்கிய ஆர்வம் காரணமாக பாளை சிறைக்கைதிகளுக்கு மட்டுமே செம்மொழி மாநாட்டில் பங்கேற்க இத்தகைய அழைப்பு கிடைத்துள்ளது.

கொலைக்குற்றங்களை செய்துவிட்டு இப்படி இருப்பதென்ன? தேர்வு செய்யப்பட்ட 6 கைதிகளுக்கும் கூட்டங்கள், விழாக்களில் பேசுவது குறித்து சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி அறிவுரைப்படி சிறை ஆசிரியர்கள் இருதய அரசு, செல்வராஜ் பயிற்சி அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் கூடுதல் தேர்ச்சி, மாநில அளவி்ல் எஸ்எஸ்எல்சி தேர்வில் முதல் இரு இடங்கள், 16 பேர் பட்டமேற்படிப்பில் தேர்ச்சி, இந்த ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை கழக தேர்வில் 46 பேர் பங்கேற்பு, செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு என பாளை மத்திய சிறை சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பாளையங்கோட்டை சிறைச்சாலை, நல்ல போதனைகளைக் கொடுக்கும் சோலையாக மாறி வருவது உண்மையிலேயே சந்தோஷமான செய்திதான் [என்ன போதனைகளைக் கொடுக்கிறார்களோ தெரியவில்லை].

ஆமாம், ஏன் நளினி, முருகன்………………………….முதலியோர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவில்லை? அவர்களுக்கு அத்தகைய சந்தர்ப்பங்கள் கொடுக்கப் படவில்லையா?

பாளை மத்திய சிறை சாதனை பட்டியல் நீளும் போது, மற்ற சிறைகளின் பட்டியல் நீளாதா?

கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஆட்டோ சங்கர் கூட்டாளி உள்பட 6 கைதிகளுக்கு அழைப்பு!

மே 15, 2010

கோவை செம்மொழி மாநாட்டில் பங்கேற்க ஆட்டோ சங்கர் கூட்டாளி உள்பட 6 கைதிகளுக்கு அழைப்பு!
ஞாயிற்றுக்கிழமை, மே 2, 2010, 11:03 [IST]

ஆட்டோ சங்கர் என்பவன் ஒரு பலான விபச்சாரத்தொழில் செய்தவன்,பல கொலைகலைச் செய்தவன், ……………..1988ல் இவனைப் பற்றி செய்தித் தாள்களில் அதிகமாக செய்திகால் வெளிவந்து கொண்டிருக்கும்.

அவனது லிஸ்டில் இருந்த விபச்சாரிகள் யார், யார்………..எந்தெந்த அரசியல்வாதிகள் சிக்கியுள்ளனர், என்றெல்லாம் செய்திகள் வரும்.

குற்றங்களுக்காக தூக்கிலிடப்பட்டான்.

குற்றங்களில் துணை போன பலர் – அவனது தம்பி மோகன், மைத்துனன் எல்டின் என்கிற ஆல்பர்ட், கூட்டாளிகள் சிவாஜி, ஜெயவேலு, செல்வராஜ், தாமன் என்கிற ராஜாராமன், ரவி, பழனி, பரமசிவன் ……இருந்தனர்.

சாவதற்கு முன்பு, கிருத்துவன் ஆனான், ஆனால், ஏற்கெனவே கிருத்துவனந்தான் என்றும் சொல்லப் பட்டது! எப்படியாகிலும், கிருத்துவர்களும் அதில் புகழ் பெற்றனர்!

நெல்லை: கோயம்புத்தூர் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு இலக்கிய ஆய்வுக் கட்டுரை அனுப்பிய பாளை மத்திய சிறை ஆயுள் தண்டனை கைதிகள் ஆறு பேருக்கு மாநாட்டில் நோக்கர்களாக பங்கேற்க சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் உலக தமிழ் செம்மொழி மாநாடு ஜூன் 23ம் தேதி துவங்குகிறது. இதையொட்டி இலக்கிய ஆய்வு கட்டுரை, கவிதை எழுதுதல் உள்ளிட்ட போட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய ஆய்வு கட்டுரை போட்டியில் பாளை மத்திய சிறையை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிகள் ஆட்டோ செல்வராஜ், சூசை மரியான், கல்கி மோகன், அய்யங்கனி, கிருஷ்ணன், ரமேஷ், பங்கேற்றனர்.

ஆனல், எத்தனை தகுதியானவர்களுக்கு அழைப்பு இல்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்: இவர்கள் இலக்கிய ஆய்வு கட்டுரை எழுதி உலக தமிழ் செம்மொழி மாநாட்டு குழுவிக்கு கடந்த மார்ச்சில் அனுப்பி வைத்தனர். இவர்கள் அனுப்பிய கட்டுரை குறித்து பரிசீலனை நடந்தது. இதற்கிடையில் இவர்கள் 6 பேருக்கும் மாநாட்டில் நோக்கர்களாக பங்கேற்க அழைப்பு விடுத்து இருக்கை எண் குறிப்பிட்டு மாநாட்டு குழு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. சிறைத்துறை தலைவர் அனுமதி பெற்று 6 பேரும் முந்தைய நாள் கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடுத்த நாள் மாநாட்டில் பங்கேற்க போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்படுவர் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆட்டோ சங்கரின் கூட்டாளி: ஆய்வு கட்டுரைகளை செம்மொழி மாநாட்டு குழுவிற்கு அனுப்பிய 6 பேரும் இலக்கிய அறிவு நிரம்பியவர்கள் என சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆட்டோ செல்வராஜ் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கொலை குற்றவாளி ஆட்டோ சங்கரின் கூட்டாளி ஆவார். இவர் பிஏ பட்டதாரி. ஆயுள் தண்டனை பெற்று 22 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். இதேபோல கைதி, கல்கி மோகன் ஓவியங்கள் வரைவதில் நிபுணராம். ஆறுபேரும் சிறையில் நடக்கும் கவிதை, கதை, கட்டுரை போட்டிகளில் பலமுறை பங்கேற்று பரிசுகள் பெற்றவர்கள். தமிழக அளவில் இலக்கிய ஆர்வம் காரணமாக பாளை சிறைக்கைதிகளுக்கு மட்டுமே செம்மொழி மாநாட்டில் பங்கேற்க இத்தகைய அழைப்பு கிடைத்துள்ளது.

கொலைக்குற்றங்களை செய்துவிட்டு இப்படி இருப்பதென்ன? தேர்வு செய்யப்பட்ட 6 கைதிகளுக்கும் கூட்டங்கள், விழாக்களில் பேசுவது குறித்து சிறை கண்காணிப்பாளர் அறிவுடைநம்பி அறிவுரைப்படி சிறை ஆசிரியர்கள் இருதய அரசு, செல்வராஜ் பயிற்சி அளித்து வருகின்றனர். கடந்த ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் கூடுதல் தேர்ச்சி, மாநில அளவி்ல் எஸ்எஸ்எல்சி தேர்வில் முதல் இரு இடங்கள், 16 பேர் பட்டமேற்படிப்பில் தேர்ச்சி, இந்த ஆண்டு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை கழக தேர்வில் 46 பேர் பங்கேற்பு, செம்மொழி மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு என பாளை மத்திய சிறை சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. பாளையங்கோட்டை சிறைச்சாலை, நல்ல போதனைகளைக் கொடுக்கும் சோலையாக மாறி வருவது உண்மையிலேயே சந்தோஷமான செய்திதான் [என்ன போதனைகளைக் கொடுக்கிறார்களோ தெரியவில்லை].

ஆமாம், ஏன் நளினி, முருகன்………………………….முதலியோர் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கவில்லை? அவர்களுக்கு அத்தகைய சந்தர்ப்பங்கள் கொடுக்கப் படவில்லையா?

பாளை மத்திய சிறை சாதனை பட்டியல் நீளும் போது, மற்றா சிறைகளின் பட்டியல் நீளாதா?

தமிழை மதிக்கக் கற்றுக் கொண்டார்களா? பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் என்ற போலித்தனம் ஏன்?

மே 2, 2010
தமிழை மதிக்கக் கற்றுக் கொண்டார்களா?
பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் என்ற போலித்தனம் ஏன்?
தமிழ்த்தாய் வாழ்த்து பாட திணறல் : தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை
மே 02,2010,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=18257

தமிழ் தாய் வாழ்த்துப் பாடலில் வரிகள் பிறழ்ந்து விட்டன என்ற குற்றம் எழுந்துள்ளது.

தமிழ் என்பது இந்த திராவிட அரசியல்வாதிகளுக்கு ஒரு வியாபாரப் பொருள் ஆகிவிட்டது.

அதுவும் ஒரு வியாபாரச் சின்னத்திற்கு அதனைக் குறைத்து விட்டார்கள், எப்படி செம்மொழி மாநாட்டிற்கு சின்னம் போட்டார்களோ அதுபோல.

இப்பொழுதுகூட, “செம்மொழி மாநாடு” என்று கூறி, தமிழ்த்தாயைக் கூறுபோட்டுவிட்டார்கள்.

கோடிகளை அள்ளுவோம், கொள்ளையடிப்போம் என்ற உன்மத்த உத்வேகத்தில், “செவ்வியக் காலம்” என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு தமிழ்த்தாயை “கற்பழித்து” விட்டனர் என்றே சொல்லலாம்.

பிறகு எதற்கு இந்த போலி நாடகம், கூத்து எல்லாம்?

முதலில் தாய் மொழி என்ற உணர்வு, தாயை, பெற்றத் தாயைப் பேணிக் காக்கும் மகனைப் போன்ற உணர்வு இருக்கவேண்டும்.

அப்பொழுதுதான் அவன், தனது தாயை தாயாகப் பாவிப்பான்.

பணம் கொடுக்கிறேன் எனக்கு சேவை செய் என்றால், வேலைக்காரிக் கூட தொடமாட்டாள்.

அந்நிலையில், இந்த திராவிட அரசியல்வாதிகள் உண்மையாக தமிழ் வளர்க்க என்ன செய்திருக்கிறார்கள்?

தமிழ் உணர்வை எப்படி பேணி வளர்த்திருக்கிறார்கள்?

மணப்பாறை: பள்ளி விழாவில் மாணவிகளுக்கு தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியாததால், பள்ளி தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுக்க அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.

மாணவிகள் பாடத் திணறியனராம்: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகிலுள்ள, செவலூர் ஆதிதிராவிட நடுநிலைப் பள்ளியில், ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள புதிய கூடுதல் கட்டிடம் திறப்பு விழா, நேற்று õலையில் நடந்தது.  போக்குவரத்துத்துறை அமைச்சர் நேரு, கல்வித்துறை அதிகாரிகள்  பங்கேற்றனர். விழா துவங்கியவுடன், தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஒலிப்பெருக்கியை ‘ஆன்’ செய்தனர். ஒலிபெருக்கி சரியாக இயங்காததால், பள்ளி மாணவிகள் எட்டு பேர், தமிழ்த்தாய் வாழ்த்து பாட, மேடைக்கு வந்தனர். துவக்கத்தில் நன்றாக பாடிய மாணவிகள், பாதிக்கு மேல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தெரியாமல் தவித்தனர்.மாணவிகள் பாடத் திணறியதை கண்ட அமைச்சர் நேரு, தானே தொடர்ந்து பாடலை பாடினார்.

தலைமை ஆசிரியர் மீது  நடவடிக்கை: அவருடன் விழாவுக்கு வந்திருந்த முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட அனைவரும் பாடி முடித்தனர். விழா முடிந்ததும் அமைச்சர் நேரு, பள்ளியின் தலைமை ஆசிரியரை அழைத்தார். அப்பள்ளி தலைமை ஆசிரியர் சிறிது காலத்துக்கு முன் இறந்து விட்டதால், பள்ளியில் தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்த, ராமகிருஷ்ணன் அமைச்சரிடம் சென்றார். அவரை அமைச்சர் நேரு, ‘தமிழ்த்தாய் வாழ்த்து கூட பாடத் தெரியாமல் மாணவிகள் உள்ளனர். ஆசிரியர்கள் என்ன தான் சொல்லித் தருகின்றனர்’ என்று கூறி கடுமையாக திட்டினார். அதன் பின் அமைச்சர் நேரு, திருச்சி கலெக்டர் சவுண்டையாவை மொபைல்போனில் தொடர்பு கொண்டு,’தமிழ்த்தாய் வாழ்த்து கூட மாணவர்களுக்கு சரியாக சொல்லித்தராமல் உள்ளனர். உடனடியாக, பள்ளித் தலைமை ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுங்கள்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

முழுவதுமாக அரசியலாக்கப்படும் செம்மொழி மாநாடு!

ஏப்ரல் 4, 2010

முழுவதுமாக அரசியலாக்கப்படும் செம்மொழி மாநாடு!

சிந்து-சமவெளி ஆராய்ச்சி ஆரம்பத்திலிருந்தே சரித்திர ஆதாரமற்ற ஆரிய-திராவிட இனவாதங்களிடையேச் சிக்கி, சமீபத்தில் விடுபட்டு உலகளவில், அந்த மாயையை விலக்கி, கட்டுக்கதை என அறிவித்து ஒதுக்கிவிட்டனர்.

இருப்பினும், தமிழகத்தில் மட்டும், சரித்திரத்திற்கு சிறிதும் மதிப்பளிக்காமல், தமக்கேயுரிய பிடிவாத “ஆரிய-திராவிட” இனக்கோட்பாடுகள், சித்தாந்தக்கள், கருதுகோள்களை வைத்துக் கொண்டு பிழைப்பு நடத்தி வருவது வேடிக்கையே.

இதில் ஐராவதத்தின் இரட்டை வேடம் நன்றாகவேப் புலப்படுகிறது.

அஸ்கோ பர்ப்போலாவின் அவர் மாநாட்டில் கலந்து கொள்ளும் நிலைபொறுத்து அமையும்.


Asko-parpola-gets-award-from-Karunanidhi

Asko-parpola-gets-award-from-Karunanidhi

aariya-thiraavita inavaaththa

செம்மொழி மாநாடு: உலகளாவிய கவிதைப்போட்டி – முதல் பரிசு ரூ.​ 1 லட்சம்!

பிப்ரவரி 26, 2010

செம்மொழி மாநாடு: உலகளாவிய கவிதைப்போட்டி – முதல் பரிசு ரூ.​ 1 லட்சம்!

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி உலகம் தழுவிய அளவில் பிரமாண்ட கவிதைப் போட்டி நடத்தப்படுகிறது. இதில் வெல்வோருக்கு ரூ. 1 லட்சம் பரிசு அளிக்கப்படவுள்ளது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கான,​​ பொது அரங்க நிகழ்ச்சிகள் அமைப்புக் குழுவின் 2-வது ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவரும்,​​ உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இதில் கவியரங்கம்,​​ கருத்தரங்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

பின்னர் அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி,​​ உலக அளவிலான கவிதைப் போட்டி நடத்தப்பட உள்ளது.​ இதற்காக உலக அளவில் விளம்பரம் செய்யப்படும்.​ போட்டி தலைப்பு குறித்த அறிவிப்பும் பின்னர் வெளியிடப்படும்.

முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்படும்.​ 2வது பரிசாக ரூ.75 ஆயிரமும்,​​ மூன்றாம் பரிசாக ரூ.50 ஆயிரமும்,​​ ஆறுதல் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கவிதை,​​ கட்டுரை,​​ பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற தலைப்பில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.

தற்போது பல்கலைக்கழக அளவில் இப்போட்டிகள் நடந்து வருகின்றன.​ மாநில அளவிலான போட்டியை மார்ச் முதல் வாரத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பார்.

வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும்,​​ 2-வது பரிசாக ரூ.10 ஆயிரமும்,​​ 3-வது பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும் என்றார் பொன்முடி.