Archive for the ‘திராவிடன்’ Category

தமிழ்-திராவிட சண்டையா, ஆரிய-திராவிட இனப் போராட்டமா, இனமா-இனத்துவமா, இனத்துவமா-இனவெறித்துவமா?  சாதியமா, ஜாதியமா அல்லது கலப்பின பரிசோதனையா? (4)

செப்ரெம்பர் 5, 2021

தமிழ்திராவிட சண்டையா, ஆரியதிராவிட இனப் போராட்டமா, இனமாஇனத்துவமா, இனத்துவமாஇனவெறித்துவமா?  சாதியமா, ஜாதியமா அல்லது கலப்பின பரிசோதனையா? (4)

 கருணாநிதி குடும்பத்தில் பிராமண மறுமகள்கள் சேர்ந்தது, இனகலப்பு ஏற்படுத்தவா?: கருணாநிதி குடும்பத்தவர் கருப்பாக இல்லை, நன்றாக வெளுப்பாக-சிகப்பாகத்தான் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பார்ப்பவர்கள், “பிராமணர்கள் / பார்ப்பனர்கள்” என்று தான் சொல்வார்கள். கருணாநிதி, “உள்ள சூத்திர ஆட்சியைக் காப்போம்,” என்று சுவரொட்டி ஒட்டியதைப் போல, யாரும் “சூத்திரர்” என்று சொல்லப் போவதில்லை. தமிழில் “இனம்” என்ற வார்த்தை “Race” என்ற பிரயோகத்தில் தான் இன்றும் உபயோகப் பட்டு வருகிறது. ஒரு பக்கம், “முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின்” என்றதும், இன்னொரு பக்கம் ஸ்டாலினின் “Dravidian stock” என்பதும், அவ்வாறே வெளிப்பட்டுள்ளது போலும். விசயம் தெரிந்தவர்கள் அவ்வார்த்தைகளை அவ்வாறு இனவெறி-இனவெறித்துவம் ரீதியில் உபயோகப் படுத்த மாட்டார்கள். திராவிடர் அல்லது தமிழர் பிரயோகம் இல்லாமல் அரசியல் செய்ய முடியாது என்ற விளக்கமும், ஏதோ தீர்மானத்துடன் வெளிப்பட்டுள்ளது என்று தெரிகிறது. ஒருவேளை கருணாநிதி குடும்பத்தில், பிராமண பெண்களை சேர்த்துக் கொண்டதால், அத்தகைய பரிசோதனை அல்லது மாற்றம் எற்படுகிறதா என்றும் கவனிக்க வேண்டும். அதனையும் மறந்து, “நான் திராவிடன்” என்றெல்லாம் ஸ்டாலின் பேசுவது, நிச்சயமாக தமிழரை ஏமாற்றத்தான். பிரஷாந்த் கிஷோர் அத்தகைய போதனையை சொல்லியிருப்பாரா என்று தெரியவில்லை. ஆக, இவையெல்லாமே, திராவிடத்துவ யுக்தியான, உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் போக்கே எனலாம்.

இனம் [Race], இனசித்தாந்தம் [Racism], மற்றும் இனவெறித்துவம் / நிறவெறித்துவம் [Racialism]: இனம் [Race], இனசித்தாந்தம் [Racism], மற்றும் இனவெறித்துவம் / நிறவெறித்துவம் [Racialism] முதலியவற்றுடன், கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் சேர்ந்திருந்தன. போர்ச்சுகீசியர் தாம், தாம் சென்ற நாடுகளில், அந்தந்த நாட்டினர் பெண்களுடன் புணர்ந்து, புதியதாக கலப்பினத்தவரை உண்டாக்கினர். அத்தகையோர் தமக்கு விசுவாசமாக இருப்பர் என்பது அவர்களது கொள்கையாக இருந்தது. அவ்வாறு உருவாக்கிய குழுமத்தை காஸ்டா [casta] என்று குறிப்பிட்டனர். அது பிறகு காஸ்ட் [caste] / ஜாதி என்றாகியது. போர்ச்சுகீசியர் கலப்பினத்தவரை சுத்தமானவர் / தூய்ன்மையாஅ இனத்தவர் என்று கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் தங்களது நிறவெறித்துவ தீவிரவாதக் கொள்கைகளை உலக யுத்தங்கள் முடிந்த பிறகு, ஹிட்லரின் மீது சுமத்த, “ஆரிய இனம்” என்று உருவாக்கி, பரப்ப ஆரம்பித்தனர். இனரீதியில், அது யூதர்களை பாதித்ததால், இனம் பொய், கட்டுக்கதை என்று மற்றினர். பிறகு, இப்பொழுது, உலகமயமாக்கம் போன்றவற்றில் வியாபாரம் தான் முக்கியம் எனும் போது, “எல்ல்லொரும் ஒன்று” போன்ற பொய்மை சித்தாந்தங்களை உருவாக்க, வழி தேடிக் கொண்டிருக்கின்றனர். இதனால் தான், டோனி ஜோசப் போன்ற வியாபார ஏஜென்டுகள், “எல்லோருமே வந்தேறிகள்” என்று சித்தாந்தத்தை மாற்றியமைக்கப் பார்க்கின்றானர். கலப்பினத் தோற்றம் அல்லது கலப்பினம் உருவாக்கம் [Miscegenation] என்பது முன்னமே இருந்த கொள்கைதான். திராவிடத்துவவாதிகளை, இதைப் பற்றி வருவதாகத் தெரிகிறது.

சமூக கட்டமைப்பு [Social stratification] மற்றும் சமூக மோதல்கள் [class conflict] : அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் ஆஸ்த்ரேலிய சமூகங்களில் சமூக கட்டமைப்பு [Social stratification] மற்றும் சமூக வர்க்க / மோதல்கள் [class conflict] இருப்பதை இனம் [race], இனவெறி [racism], மற்றும் இனவெறித்துவம் [racialism] முதலியவற்றால் அறியப் பட்டு, ஒப்புக் கொண்டு, திராவிடத்துவ வாதிகளால் நியாயப் படுத்தப் படுகிறது. இத்தனை ஆண்டுகள் ஆனாலும், விஞ்ஞானம்-தொழிற்நுட்பங்கள் வளர்ந்தாலும், பொருளாதாரம் வளர்ந்து, வசதிகள் பெருகினாலும், புறத்தோற்றங்களில் மாறுதல்கள் ஏற்பட்டாலும், பெரிய நகரங்களில் அவை இல்லாமல் இருப்பது போன்று உள்ளது. ஆனால், நகர, கவுன்டிகளில் வெளிப் படுகின்றன. கருப்பர், பழுப்பு நிறத்தவர், குடிபெயர்ந்தவர் தவறுகளை, பிழைகளை, குற்றங்களை செய்வர் என்ற பொது நம்பிக்கை உள்ளது[1]. அதன்படியே, சட்டம் மற்றும் ஒழுங்குமுறை அமூல் படுத்தும் துறைகள், அதிகாரிகள் வேறுபாட்டை, வெறுப்பைக் காட்டி வருகின்றனர். வெள்ளைக் காரர்கள் அத்தகையோரை ஏற்றுக் கொள்வதில்லை. தங்களது உரிமைகளை, வசதிகளை, வேலைகளை அவர்கள் பரித்துக் கொள்கின்றனர் என்ற எண்ணம் தான், அவர்களது இனம் [race], இனவெறி [racism], மற்றும் இனவெறித்துவம் [racialism] முதலியவற்றில் வெளிப் பட்டுள்ளன. இங்கு, தமிழக்த்தில் அத்தகைய நிறவெறி இல்லையென்றாலும், இனவெறி இவ்வாறு ஊக்குவிக்கப் படுவதால், சட்டம்-ஒழுங்கு அமூல் படுத்தும் அதிகாரிகள், ஊழியர்கள் அவ்வாறு நடந்து கொள்ளலாம். தமிழக அரசுத் துறையினர் லஞ்சம் வாங்குவது, போலீஸார் கடுமையாக நடந்து கொள்வது, ஊழல் செய்வது, முதலியவற்றில் வெளிப்படுகிறது. ஏனெனில், மாட்டிக் கொண்டாலும், தப்பித்துக் கொள்ளலாம் என்ற “ஃபார்முலா” தெரிந்துள்ளது.

ஈவேராவின் திராவிடஸ்தான், அண்ணாவின் திராவிட நாடு: “திரவிடஸ்தான்” ஜின்னா-பெரியார்-அம்பேத்கர் கூட்டத்தில், ஜின்னா “பாகிஸ்தான்” அறிவித்ததிலேயே செத்து விட்டது. 1948ல் திமுக தோன்றியதிலிருந்து, ஈவேராவின் “திரவிடஸ்தான்” முழுமையாக சமாதிக்குள் சென்று, “திராவிட நாடு,” என்ற கோரிக்கையானது. தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற ஆசையில், அண்ணா அதையும் மறந்து, “அடைந்தால் திராவிட நாடு, இல்லையென்றால் சுடுகாடு,” போன்றவை குப்பையில் போடப் பட்டன. “தமிழ் நாடு” என்று பெரயர் மாற்றம் செய்து, அந்த களிப்பில் இருந்து விட்டனர். பிறகு, கருணாநிதி, “மாநில சுயயாட்சி,” என்றெல்லாம் கூறிக் கொண்டு, பொழுதை ஓட்டினார். இந்திரா காந்தியுடன் கூட்டு வைத்தவுடன், அதையும் மறந்தாகி விட்டது. பிறகு, பொழுது போகவில்லை என்றால், அவ்வப்பொழுது, கருணாநிதி, பேசுவதுண்டு. ஆனால், இடையில், இலங்கைக் குழுக்களால் மற்றும் தீவிரவாத கம்யூனிஸ்ட் இயக்கங்களால், “தமிழ் தேசியம்” போர்வையில், “தனித்தமிழ்நாடு” கோரிக்கையுடன், சில கூட்டங்கள் வேலை செய்ய ஆரம்பித்தன. அவை, “தமிழ் தேசியத்திற்கு” கொடி பிடித்தன. பாமக கூட 1980களில் “சுய நிர்ணயம்” என்றெல்லாம் பேசி, மாநாடு நடத்தியது. அதனால், “திராவிடத்தை” மறுத்தனர். “திராவிடத்தால் வீழ்ந்தோம்,” என்று குணா எழுதியது, திராவிடத்தைக் கேள்விக் கேட்டது. 1984ல் கொஞ்சம் அடங்கியது, வீரப்பன் மற்றும் பிரபாகரன் கொலையுண்ட பிறகு, அவை அடங்கி விட்டன. இருப்பினும், இந்திய தேசியத்தை எதிர்க்கும் சாக்கில், அவ்வப்பொழுது, வெளிப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றது.

முரசொலி மாறனும், அவரது மகன்களும்திராவிடம் மற்றும் தமிழ் குழி தோண்டி புதைக்கப் பட்டது: திராவிடன் என்றெல்லாம் பேசி, ஊரை ஏமாற்றி, கருணாநிதியின் குடும்பம் பார்ப்பனப் பெண்ணை மறுமகளாக்கிக் கொண்டது. அரசியலிலும், வடக்கத்தி “இந்திரா காந்தி,” ஆரிய பார்ப்பனர் வாஜ்பேயி என்று கூட்டு வைத்துக் கொண்டு பிழைப்பை நடத்தினர். “வடக்கு வாழ்கிறது, தெற்குத் தேய்கிறது,” என்பதெல்லாம் அண்ணாவோடு போய் விட்டது. கருணாநிதி குடும்பம் வாழ்கிறது, மற்றவர்களின் குடும்பங்கள் தேய்கின்றன என்று மாறி விட்டது. கருணாநிதி, மத்திய அரசுடன் கூட்டு வைத்து, தேசியத்தில் கலந்து, வியாபாரம், வணிகம் என்ற ரீதியில் கம்பெனிகளைக் பெருக்கிக் கொண்டார். அத்தகைய தேசிய வியாபாரத்தில், தமிழும் வேகவில்லை, திராவிடமும் செல்லுபடியாகவில்லை, அதனால், “ஏன் வேண்டும், இந்த இன்ப திராவிடம்?,” என்று எழுதிய முரசொலி மாற வாரிசுகளே, பலமொழிகளில் டிவி-செனல்களை ஆரம்பித்து, கோடிகளில் வியாபாரத்தைப் பெருக்கினர். திரைப்பட வியாபாரமும் சேர்ந்த போது, எல்லா மொழிகளிலும் படங்களையும் கருணாநிதி சொந்தக் காரர்கள் எடுத்து, பணம் சம்பாதித்தனர். அரசியலுக்காக, அவ்வப்பொழுது, “இந்து எதிர்ப்பு” என்று மிரட்டி வந்ததோடு, திராவிடத்துவத்தின் தேசியம் ஒடுங்கியது. சன் பிக்சர்ஸ் படம் எடுத்தாலும், உதயநிதி நடித்தாலும், நீக்ரோ பெண்களை கதாநாயகிகளாகப் போடுவதில்லை. வெளுத்தத் தோல் பெண்களைத் தான் தேடிப் பிடித்து போடுகிறார்கள்!

திராவிடம், ஆரியத்துடன் கூட்டு வைப்பது ஏன்?: இவ்வாறு, திராவிடஸ்தான், திராவிட நாடு, திராவிட தேசம், திராவிடதேசியம், தமிழ் தேசியம், தேசிய மொழி இனங்கள், சுய ஆட்சி, மாநில சுய ஆட்சி, சுய நிர்ணயம், தமிழகம், தமிழ் தேசியம், தமிழீழம், அகண்ட தமிழகம் என்றெல்லாம் பேசிவந்தாலும், தேர்தலில் போட்டியிட, அண்ணாதுரை [முதலியார்], பிரிவினைவாதத்தை கைவிட்டார், தேர்தலில் நின்றார், முதலமைச்சர் ஆனார். கருணாநிதி, ஜாதியம் வைத்து, நெடுஞ்செழியினை [முதலியார்] ஓரம் கட்டி ஆட்சியினை பிடித்தார். எம்ஜிஆரை “மலையாளத்தான்” என்று வைது அரசியல் நடத்தி, ஜெயலலிதாவை “பாப்பாத்தி” என்று வெறுப்பைக் கக்கி, காலத்தை ஓட்டினார். ஆனால், திராவிடம் வீழ்ந்ததா, எழுந்ததா என்று அவ்வர்கள் தான் சொல்ல வேண்டும். இங்கு ஜாதியமும் இனவெறித்துவ ரீதியில், திராவிடத்துவத்தில் வேலை செய்வதைக் கவனிக்கலாம். அதனால், ஜாதிய அரசியல், சாதிய ஓட்டு வங்கி முதலியவை தொடர்ந்து வருகின்றன. ஆரிய-பார்ப்பனக் கட்சி பிஜேபியுடன், கருணாநிதி கூட்டு வைத்துக் கொண்டதும், இப்பொழுது அணியில் சேர தயாராக இருப்பதும், அவர்களது “செக்யூலரிஸ” அரசியலைக் காட்டுகிறது. திராவிடத்துவம் இனவெறித்துவம் போன்றே செயல்படுகிறது.

தமிழ், தமிழர், தமிழ்நாடு [திராவிடக் கட்டுகதை] என்று மூளைசலவை செய்து, தமிழ்நாட்டை கெடுத்து, சீரழித்ததே, இந்த கோஷ்டிகள் தாம்: 1930-40களில் தனித்தமிழ் இயக்கம், திராவிட இனக் கட்டுக்கதைகளை வளர்த்தன. சைவம் என்ற போர்வையில், வைணவத்தை எதிர்த்து, தெலுங்கு பேசும் மக்களை அவமதித்த போக்கு, நீதிகட்சியைக் குலைத்து, திராவிட கழக போர்வையில், தமிழக பிரிவினை உருவெடுத்தது. ஆனால், அத்தகைய தேசவிரோத கொள்கையிலிருந்து மற்ற மொழி மக்கள் வேறுபட்டனர். 1940-50 திராவிட இனவெறி கட்டுக் கதைகளினால் தான், முதலில் ஆந்திரா தனியாகப் பிரிந்தது, முதல் மொழிவாரி மாநிலமானது[2]. தொடர்ந்து “தமிழ்” தான் உயர்ந்தது, அதிலுருந்து தான் மற்ற மொழிகள் தோன்றின என்பதனை சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. குறிப்பாக, தெலுங்கு மக்கள் ஒப்புக் கொள்ளவில்லை. பட்டிபோர்லு [Bhattiporlu] வரிவடிவங்களை [script] மற்றும் கல்வெட்டுகளை [inscriptions] வைத்துக் கொண்டு, தெலுங்கு வரிவடிவம் BCE மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று வாதிட்டனர். “தமிழ்நாடு” உருவானபோது கூட, எல்லை தகராறுகளில் கேரளா, ஆந்திரா மற்றும் ஆந்திராவுடன் எதிராகவே இருந்தது. தமிழநாட்டைத் தவிர மற்ற மாநில மக்கள் தாங்கள் “திராவிடர்கள்” என்றெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால், திராவிடத்துவ சித்தாந்தம் தமிழ்நாடு மாநிலத்துடன் சுருங்கி விட்டது. காவிரி பிரச்சினையில், முன்னர் பாமகவினால், அதிகமாகவே வெறியூட்டப் பட்டு, பிறகு திராவிட பிரிவினைவாதிகளால் தீயூட்டப் பட்டது. அப்பொழுது, இங்கு “உடுப்பி” ஹோட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஶ்ரீ ராகவேந்திர மடங்களும் தாக்கப்பட்டன.

ஆரியதிராவிட கூட்டணியா, “திராவிடியன் ஸ்டாக்செய்யும் வேலையா?: ஸ்டாலினும், கிஷோர் பிரஷாந்த் என்ற ஆரிய-பார்ப்பன அரசியல் ஆலோசகரை கோடிகள் கொடுத்து, அரசியல் வியாபாரத்திற்கு வைத்துக் கொண்டு, “திராவிடத்துவ இந்துத்துவத்தை” கையில் எடுத்து, பார்ப்பன-பாஜக கூட்டணியைத் தோற்கடித்து, ஆட்சிக்கு வந்தாகி விட்டது. உடனே, “திராவிடியன் ஸ்டாக்,” என்று இனவெறியோடு குறிப்பிட்டு, “ஹாட்-அன்ட்-கோல்ட்” (Hot and cold) யுக்தி ஆரம்பித்து வைக்கப் பட்டது. அதிமுகவை ஒடுக்குவது, பாஜகவை மடக்குவது, எப்படியாவது, 2021-2026 வரை வெற்றிகரமாக ஆட்சியை நடத்துவது என்ற திட்டத்துடன் செயல்பட ஆரம்பித்தாகி விட்டது. திமுக 2024 பாராளுமன்ற தேர்தலில், பாஜகவுடன் கூட்டு வைக்கவும் தயாராகத்தான் உள்ளது. ஒருவேளை பாஜக ஜெயிக்காது என்றால், திட்டம் மாறும்.

© வேதபிரகாஷ்

04-09-2021


[1] இன்றும், டிவி-செனல் சீரியல்களில் அவ்வாறே காட்டி வருகின்றனர். “சுந்தரி” சீரியல் இப்பொழுது ஓடிக் கொண்டிருக்கிறது. காபி மிஷினை ரிப்பேருக்கு ஆக்கிய காட்சி வேறு, பிறகு காபி போட்டுக் கொடுத்து, வெள்ளைதோல் எஜமானி ஆனந்தம் அடையும் காட்சி வேறு.

[2] Andhra Pradesh was carved out of Madras Presidency on October 1, 1953. This gave a death blow to the concept of “Dravidastan” and the separate nation for “Dravidian speaking people.” In other words, the “Dravidian” demand was restricted to “Tamilnadu.” The linguistic formation of States took place in 1956 with Kerala and Karnataka. Thus, “Dravidastan” was reduced to “Tamilnadu”.

தமிழ்-திராவிட சண்டையா, ஆரிய-திராவிட இனப் போராட்டமா, இனமா-இனத்துவமா, இனத்துவமா-இனவெறித்துவமா? திராவிடத்துவப் பிடிவாதத்தில் தொடரும் சித்தாந்தம் (3)

செப்ரெம்பர் 5, 2021

தமிழ்-திராவிட சண்டையா, ஆரிய-திராவிட இனப் போராட்டமா, இனமா-இனத்துவமா, இனத்துவமா-இனவெறித்துவமா? திராவிடத்துவப் பிடிவாதத்தில் தொடரும் சித்தாந்தம் (3)

திராவிடம் இயக்கம் திராவிடம் என்பதை எப்படி விளக்கியது. ஸ்டாலின் ராஜாங்கம், தொடர்ந்து விளக்கியது, “அதனால், என்னமாதியான பிரச்னைகள் வந்தது என்று அவர்கள் ஒரு விமர்சனத்தை வைக்கிறார்கள் என்றால் அது நியாயமானது. ஆனால், இங்கே என்ன பிரச்னை என்றால், திராவிடத்தை எதிர்க்கிற இடத்தில் இத்தகைய தமிழ்த்தேசியர்கள் வைப்பது எதுவாக இருக்கிறது என்றால், திராவிடத்தைவிட எந்த வகையிலும் முற்போக்காக இல்லாத ஒரு தமிழ் அடையாளத்தை வைக்கிறார்கள். திராவிடத்திடம் ஒரு பிரச்னை இருக்கிறது என்பது உண்மைதான். அதில் ஒரு குழப்பத்தை திராவிட இயக்கம் உண்டுபண்ணியிருக்கிறது. ஆனால், திராவிடம் என்ற அடையாளத்தை வைத்துக்கொண்டு பேசிய திராவிட இயக்கத்திடம் இருந்த ஒரு சமூக அக்கறை இருந்தது இல்லையா. அந்த அக்கறை திராவிட அடையாளத்தை புறக்கணித்துவிட்டு தமிழ்த்தேசியர் முன்வைக்கிற தமிழ் அடையாளத்தில் திராவிட இயக்கத்தினர் கொடுத்த உள்ளடக்கம் இல்லை. என்னைக் கேட்டால், திராவிடத்துக்கும் தமிழ் தேசியத்துக்கும் ஒரு தலித் பார்வையில் ஒரு பெரிய வித்தியாசமும்ம் இல்லை,” என்று கூறினார்.

தங்கம் தென்னரசுவின் அறிவிப்பு: தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்ட துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு, “சங்க இலக்கியங்களைச் சந்தி பிரித்து எளிமைப் பதிப்புகளாகவும், திராவிடக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலையும் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் கூட்டு வெளியீடுகளாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கெனத் தொடராச் செலவீனமாக ரூபாய் 10 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். இதனிடையே, சங்க இலக்கியங்களை  தொகுத்து அவற்றுக்கு திராவிட இலக்கியம் என தமிழக அரசு பெயர் சூட்ட முயற்சிப்பதாக இந்த அறிவிப்பு தவறாக பரப்பப்பட்டத். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் உள்ளிட்டோர் அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறினர்.

திராவிட களஞ்சியம்தேவையற்ற சர்ச்சைதங்கம் தென்னரசு: இந்நிலையில், அரசின் அறிவிப்பு தொடர்பாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அமைச்சர் நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்[1]. அதில்,  “திராவிட களஞ்சியம் தேவையற்ற சர்ச்சை என்றும்  என்ன அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறோம் என்று முறையாக படிக்க வேண்டும், படித்துவிட்டு கருத்துக்களை கூற வேண்டும் என்றும் தெரிவித்தார்[2]. திராவிட களஞ்சியம் என்பது 150 ஆண்டுகளாக திராவிட இயக்கம், திராவிட உணவாளர்கள், திராவிட மொழிகள் சார்ந்து அவர்கள் தொடர்ச்சியாக நாம் சமுதாயத்தில் எடுத்து வைத்துள்ள மொழிக்கொள்கை, மாநில சுயாட்சி, இட ஒதுக்கீடு, சமூக நீதி ஆகியவை[3]இதையெல்லாம் குறித்து இந்தத் தளங்களில் பல ஆய்வுக் கட்டுரைகள், தலையங்கங்கள், கருத்துக்கள், கவிதைகள் எல்லாம் ஒன்று சேர்த்து தற்காலத்தில் இருப்பவர்கள் வரை சிந்து சமவெளி நாகரீகத்துக்கும் நமக்குள் இருக்கக்கூடிய மொழி தொடர்புகள் வரலாற்று இணைப்புகள் எல்லாம் விளக்கக் கூடிய வகையிலே ஒரு தொகுப்பாக திராவிட களஞ்சியம் என்ற பெயரிலே ஒரு தொகுப்பாக வருகிறது,” என்று கூறினார்[4].

திராவிடக் களஞ்சியம், சங்க இலக்கியம் இரண்டும் வேறு வேறு தொகுப்பு[5]: “சங்கத் தமிழ் நூல்களுக்கு திராவிட களஞ்சியம் என்ற பெயரை சூட்ட தமிழ்நாடு அரசு முயற்சிக்கிறது என்ற கூற்று அடிப்படை அற்றது, உண்மை அற்றது என்று விளக்கமளித்த அவர்செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் தொல்காப்பியத்திலிருந்து வரக்கூடிய செவ்வியல் இலக்கியங்களை எல்லாம் தொகுத்து அவர்கள் வெளியிடுகிறார்கள். அதற்கு தமிழ்நாடு அரசு 10 லட்சம் தன்னுடைய பங்களிப்பை வழங்கி இருக்கிறது. இவை ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை தனியானவை தனித்துவமானவை, எனவே இவற்றை எல்லாம் ஒன்றாக போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். குழப்புவதற்கான முயற்சியிலும் ஈடுபட வேண்டாம், அப்படி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கவும் முயல வேண்டாம்,” என்று தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்[6].

பாவாணரும், திராவிடமும், தீதும்: பாவாணருக்கு தமிழ் தெரியும், அதனால், வார்த்தை ஜாலத்திலேயே, தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு, புத்தகங்களை எழுதி வந்தார். “திராவிடம்” நிச்சயமாக, தமிழ் இல்லை, தமிழ் தொடர்பு, சம்பந்தம், சித்தாந்தம் இல்லை என்பதினால், அதனை எதிர்த்தார். இது, திராவிடத்துவ வாதிகளுக்கு திகைப்பாக, அதிர்ச்சியாக இருந்தது. கால்டுவெல்லின் “திராவிடம்,” “திராவிடனை” உருவாக்கி, அதனை, “திராவிடத்துவமாக்கி” அரசியலாக்கினாலும், ஜின்னாவால் அந்த மாயை தகர்க்கப் பட்டது. ஈவேரா மறைத்தாலும், திமுக அதனை அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்திக் கொண்டது. திராவிடத்துவ வாதிகள், சினிமாவுடன் சேர்ந்து, கவர்ச்சி பாணியில், அடுக்கு மொழி வசனங்களில், மேடை பேச்சுகளில் உபயோகப் படுத்திக் கொண்டு, “திராவிடனை” ஒரு சின்னமாக்கி, அடையாளமாக்கி, மக்களை உசுப்பி விட்டனர்.

சங்க இலக்கியங்கள், ஆரியர், திராவிடர் முதலியன: இவர்கள் எல்லோருமே, எட்டுத்தொகை மற்றும் பத்துப் பாட்டு நூற்களை ஒரு தடவையேனும், கவனமாக வாசித்து, பொருள் அறிந்திருப்பார்களா என்ற சந்தேகம், அவர்கள் பேசியதிலிருந்தே அறிய முடிகிறது. “சங்கப் புலவர்களுக்கு” ஆரிய-ஆரியர்-ஆரியன் தெரிந்திருந்தது, ஆனால், “திராவிடன்” தெரியாமல் இருந்தது. ஏனெனில், அத்தகைய சொல்லும் இல்லை, பிரயோகமுகம் இல்லை. சமஸ்கிருதம் தெரியாது என்பதால், பற்பல புத்தகங்களில் உள்ளதை அரைகுறையாகப் படித்து அல்லது மற்றவர்கள் சொன்னதைக் கேட்டு, தங்களது வாதங்களை வைத்துள்ளார்கள் என்றும் தெரிகிறது. செத்தப் பாடை என்பதால், “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்,” “தமிழோடு ஆரியமும் கலந்து,” என்பதெல்லாம்[7] தெரியாமல் இன்றும் இருக்கின்றனரா, இல்லை, அறிந்தும் அறியாதது போல நடிக்கின்றனரா என்று கவனிக்க வேண்டும்.  7, 8 அல்லது 11ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப் படும் நாமதீப நிகண்டு, “தமிழ்” என்பதற்கு “திரவிடம்” என்ற சொல்லைக் காட்டுகிறது[8]. 9வது நூற்றாண்டைச் சேர்ந்த, சேந்தன் திவாகரம் பேசப்படுகின்ற, 18 மொழிகளுள் ஒன்றாக “திரவிடத்தை”க் குறிப்பிடுகிறது. பிறகு வந்த “காந்தத்து உபதேசக் காண்டம்” என்ற நூல் சிவபெருமான் எப்படி அகத்தியருக்கு திரவிடத்தினுடைய இலக்கணத்தை வெளிப்படுத்தினார் என்ற குறிப்பைக் கொண்டுள்ளது. “பிரயோக விவேகம்” என்ற நூலின் ஆசிரியர் சமஸ்கிருத வார்த்தை “திரமிளம்” என்பதுதான் “தமிழ்” என்றாகியிருக்க வேண்டும் என்று விளக்குகின்றனர். ஆனால், “தமிழ்” என்பதுதான் சமஸ்கிருதத்தில் “திரவிடம்” என்று வழங்கப் படுகிறது என்கின்றனர். சிவஞானயோகியும் திரவிடம் என்பது தென்மொழி என்பதனைக் குறிக்க உபயோகப்படுத்த படுகிறது என்கிறார்[9].  கே.வி.ராமகிருஷ்ண ராவ் தனது ஆய்வுக் கட்டுரைகளில் இவற்றை விளக்கியுள்ளார்[10]. ஆனால், இதையெல்லாம் விடுத்து, அயோத்திதாசர் என்று ஸ்டாலின் பேசுவதும் வேடிக்கையாக இருக்கிறது.

© வேதபிரகாஷ்

04-09-2021


[1] NEWS18 TAMIL, திராவிட களஞ்சியம்சங்கத் தமிழ் நூல்களில் பெயரை மாற்றும் முயற்சியா? அமைச்சர் விளக்கம்!, LAST UPDATED : SEPTEMBER 02, 2021, 23:59 IST

[2]  https://tamil.news18.com/news/tamil-nadu/minister-thangam-thennarasu-clarifies-about-dravida-kalanjiyam-mur-551379.html

[3] நக்கீரன் செய்திப்பிரிவு, திராவிடக் களஞ்சியம் பெயர் மாற்றம்அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்! , Published on 02/09/2021 (10:49) | Edited on 02/09/2021 (11:04)

[4] https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dravidian-repository-name-change-minister-thangam-thennarasu-description

[5] தினமணி, திராவிடக் களஞ்சியம், சங்க இலக்கியம் இரண்டும் வேறு வேறு தொகுப்பு : தங்கம் தென்னரசு விளக்கம், By DIN  |   Published on : 03rd September 2021 06:40 AM

[6]https://www.dinamani.com/tamilnadu/2021/sep/03/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81–%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3692186.html

[7]  ஆறாம் திருமறை, திருநாவுக்கரசர் தேவாரம், திருமறைக்காடு, பாடல் எண் : 5             

மூரி முழங்கொலிநீ ரானான் கண்டாய்

    முழுத்தழல்போல் மேனி முதல்வன் கண்டாய்

ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்

    இன்னடியார்க் கின்பம் விளைப்பான் கண்டாய்

ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்

    அண்ணா மலையுறையெம் அண்ணல் கண்டாய்

வாரி மதகளிறே போல்வான் கண்டாய்

    மறைக்காட் டுறையும் மணாளன் தானே

Tevaram of Tirugnana Sambandar, 6th Tirumarai, 23rd Padigam, Tirumaraikkadu-6479.

In another place, he says, “Aryan with chaste Tamil” – 46th Padigam, Tirumarakkadu-6710. Here, both ‘Aryan’ and ‘Tamizhan’ refer to God Shiva.

[8] Sivasubramanya Kavirayar, NamaThipa Nikandu, Thanjavur University, 1985.

[9] Sabapathy Navalar, Dravida Prakasikai, Madras, 1899, p.7.

[10] https://aryandravidian.wordpress.com/2010/04/04/3/

தமிழ்-திராவிட சண்டையா, ஆரிய-திராவிட இனப் போராட்டமா, இனமா-இனத்துவமா, இனத்துவமா-இனவெறித்துவமா? தமிழ் தேசியம் ஏன் திராவிட தேசியத்தை எதிர்க்கிறது? (2)

செப்ரெம்பர் 5, 2021

தமிழ்திராவிட சண்டையா, ஆரியதிராவிட இனப் போராட்டமா, இனமாஇனத்துவமா, இனத்துவமாஇனவெறித்துவமா? தமிழ் தேசியம் ஏன் திராவிட தேசியத்தை எதிர்க்கிறது? (2)

திராவிடம்என்ற சொல்லை மற்றவர்கள் எதிர்த்தது: மணியரசன்[1], “முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அண்மைக்காலமாக தமிழ் – தமிழர், தமிழ்நாடு என்ற இயற்கையான சொற்களுக்கு மாற்றாக ‘திராவிட’ என்ற வடசொல்லைப் புகுத்திவருகிறார்[2]. தமிழ்நாட்டு வளர்ச்சியைக் குறிப்பதற்குக்கூட அவர் ‘திராவிட மாடல்’ என்று பெயர் சூட்டினார்[3]. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்களுக்கு அண்மையில் பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தபோது, ஸ்டாலின் அவர்கள் ‘திராவிடச் சிறுத்தை’ என்று சிறப்புப் பெயர் சூட்டியதையும் இங்கு நினைவுகொள்ள வேண்டும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர்கள் திருமாவளவன் அவர்களை ‘எழுச்சித் தமிழர்’ என்று அழைக்கிறார்கள். அதை ‘திராவிடச் சிறுத்தை’ என்று மாற்றுகிறார் ஸ்டாலின்,” என்று எதிர்ப்பை விளக்கினார். “அண்மையில் நடந்த சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் பரப்புரையில் ‘திராவிடம்’, ‘திராவிடர்’ என்ற சொற்களை அதிகம் பயன்படுத்தாமல், தமிழர் என்ற சொல்லையே அதிகம் பயன்படுத்தினார் ஸ்டாலின். ஆனால், முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், “நான் திராவிட இனத்தைச் சேர்ந்தவன்” (I belong to Dravidian Stock) என்று அறிவித்துக்கொண்டார். தமிழர்களிடம் வாக்கு வாங்கும வரை அவர்களின் அசல் இனப்பெயரைச் சொல்லுவது, வாக்கு வாங்கி வெற்றி பெற்றபின் ‘திராவிடத்தை’த் திணிப்பது என்ற தந்திரமாகத்தானே இதைப் பார்க்க முடிகிறது”.

திராவிடக் களஞ்சியம்என்ற பெயரில் வெளியிட்டால், அதற்கு எதிராக தமிழர்கள் கருத்தைத் திரட்டி அறவழிப் போராட்டம்: மணியரசன் தொடர்ந்து, விளக்கியது, “தமிழ்நாட்டில் விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்குப் பிறகு வந்த தமிழ் இலக்கியங்களில்தான்திராவிடஎன்ற சொல் இருக்கிறது. அசலாகதிராவிடஎன்ற சொல்லை உருவாக்கியவர்கள் ஆரியர்கள். தென்னக மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல்திராவிடஎன்ற சொல்லை சமஸ்கிருத நூல்களான மனுதர்மத்திலிருந்தும், குமாரிலபட்டரின்தந்திரவார்த்திகாநூலிலிருந்தும் எடுத்துக்கொண்டதாகக் கூறியுள்ளார். தமிழ் இன உணர்வும், தமிழ்த்தேசியமும் வளர்ந்து வரும் இக்காலத்தில் தமிழ், தமிழினப் பெருமிதங்களைதிராவிட மாயையில் மறைக்கும் செயலை இனிமேலாவது தி.மு. கைவிட்டால் நல்லது. திராவிட முன்னேற்றக் கழகத்திலுள்ள தமிழறிஞர்களும், இன உணர்ச்சியுள்ள தமிழர்களும் தங்கள் தலைமைக்கு இதையெல்லாம் சுட்டிக்காட்டி, தமிழை திராவிடமாகத் திரிக்கும் வேலையைக் கைவிடச் செய்ய வேண்டும். தமிழர்களின் இந்த வேண்டுகோளைப் புறக்கணித்து, சங்கத் தமிழ் நூல்களைப் பிடிவாதமாகத்திராவிடக் களஞ்சியம்என்ற பெயரில் வெளியிட்டால், அதற்கு எதிராக தமிழர்கள் கருத்தைத் திரட்டி அறவழிப் போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார்..

 ‘தமிழ்க்களஞ்சியம்என்று பெயரிட வேண்டும்சீமான்: இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கயில் கூறியிருப்பதாவது[4]: “சங்கத்தமிழ் இலக்கியங்களைத் தொகுத்து அவற்றிற்குதிராவிடக் களஞ்சியம்எனப்பெயர் சூட்டப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது பேரதிர்ச்சி தருகிறது. தமிழர்களின் அறிவுக்கொடைகளாக இருக்கும் பழந்தமிழ் இலக்கியங்களை, ‘திராவிடக்களஞ்சியம்என அடையாள மாற்றம் செய்ய முயலும் திமுக அரசின் செயல் தமிழினத்திற்கெதிரான மிகப்பெரும் மோசடித்தனமாகும். மனு ஸ்மிருதியிலிருத்து எடுத்தாளப்பட்ட வடச்சொல்லான, ‘திராவிடம்என்பதனைக் கொண்டு, ஆரியத்திற்கு நேரெதிராகத் தனித்துவத்தோடு நிற்கும் தன்னிகரில்லா தமிழ்மொழியையும், தமிழ்ப்பேரினத்தையும் அடையாளப்படுத்தும் இழிநிலைக்கெதிராகக் கருத்தியல் பரப்புரையும், அரசியல் போரும் நடத்திக்கொண்டிருக்கும் வேளையில், தமிழின் தொன்மக் களஞ்சியங்களையும் இல்லாத திராவிடத்தின் பெயரால் அடையாளப்படுத்தும் கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. சங்க இலக்கியங்களிலோ, பழந்தமிழ் காப்பியங்களிலோ, தொன்ம இலக்கண இலக்கிய நூல்களிலோ என எங்கும் குறிக்கப்பெறாததிராவிடம்எனும் திரிபுவாதச் சொல்லைக் கொண்டு தமிழ் களஞ்சியங்களைக் குறிப்பிடும் திராவிடத்திருட்டுத்தனம் வெட்கக்கேடானது. ஆகவே, சங்கத்தமிழ் இலக்கியங்களைதிராவிடக்களஞ்சியம்என அடையாளப்படுத்தும் கொடுந்தீங்கான இப்போக்கை உடனடியாகக் கைவிட்டு, அவற்றை, ‘தமிழ்க்களஞ்சியம்என்றே குறிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்,” என்று வலியுறுத்தியுள்ளர்[5].

எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கத்திடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் கருத்து கேட்டது. அவர் கூறியதாவது: “ஒரு காலத்தில் திராவிடம் என்று சொல்ல வேண்டிய அவசியம் இருந்தது. அன்றைய புரிதல் அதுதான். பிரிட்டிஷார் அந்த சொல்லை பயன்படுத்தினார்கள். நாமும் அதை பயன்படுத்தினோம். நாம் ஒரு வழக்கமான தமிழ்த்தேசியர்களைப் போல, திராவிடம் என்ற அடையாளம் உருவான காலகட்டத்தையே மனதில்கொள்ளாமல், திராவிடம் என்று சொல்லி வசைபாட வேண்டியதில்லை. அதே நேரத்தில், நம்முடைய சம காலத்தில், தமிழ் வேறு தெலுங்கு, மலையாளம், கன்னடம் வேறு என்ற மரபு உருவாகி நிலைத்துவிட்ட விட்ட பின்னால், தமிழ்மொழியை தமிழ் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். தேவையற்ற குழப்பத்தையும் தேவையற்ற சிக்கலையும் ஒரு அரசே உருவாக்கக் கூடாது. அன்றைக்கு திராவிடம் என்ற ஒரு பொது சொல்லால் இவர்கள் எல்லாம் புரிந்துகொண்டிருந்தார்கள் என்று நாம் விளக்கிக்கொள்ளலாம். ஆனால், இவ்வளவு நடந்த பிறகு, சமகாலத்தில் தமிழை தமிழ் என்று சொல்லிவிட்டு போகலாமே அதிலென்ன இருக்கிறது.” என்று கூறினார்.

கால்டுவெல்லின் திராவிடம் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது: இல்லாத ஒரு திராவிடம் இன்று குறிப்பிட்டு தமிழ்த் தேசிய கடும்போக்குவாதிகள் பலரும் விமர்சித்து வருகிறார்கள். இது குறித்து உங்களுடைய கருத்து என்ன என்று ஸ்டாலின் ராஜாங்கத்திடம் கேள்வி எழுப்பியபோது அவர் கூறியதாவது: “பொதுவாக அது அவ்வளவு பொருத்தமான விமர்சனம் அல்ல. திராவிடம் என்பதை வெறும் மொழிக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதே வேளையில் திராவிடம் என்பது தமிழைக் குறிப்பதற்கான இன்னொரு பேர்தான். அதை குழப்பியது திராவிட இயக்கம்தான். எனவே திராவிட இயக்கத்தைப் பற்றிய விமர்சனத்தைதான் இந்த வார்த்தையினுடாக அவர்கள் செய்கிறார்கள். மற்றபடி, திராவிடம் என்பது ஒவ்வொருத்தருக்கும் அவர்களுக்கு ஏற்றமாதிரி கடந்த காலத்தில் பொருள்பட்டிருக்கிறது. திராவிடம் என்ற சொல் பெரியாருக்கு ஒரு விதமாக பொருள்பட்டிருக்கிறது. அயோத்திதாசருக்கு ஒருவிதமாக பொருள்பட்டிருக்கிறது. தலித்துகளுக்கு ஒருவிதமாக பொருள்பட்டிருக்கிறது. அதனால், திராவிடம் என்பதை ஒவ்வொருத்தரும் ஒரு மாதிரியாக பொருள் கொண்டார்கள். உதாரணத்துக்கு தலித்துகள் ஆதி திராவிடர்கள் என்று பொருள்கொண்டார்கள். இது ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் குறிக்கும் ஒரு பொது சொல்லாக அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். பெரியார் அதை ஒரு மாதிரி விளக்கினார். அதனால், திராவிடம் என்ற சொல்லையே எதிர்ப்பது என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

© வேதபிரகாஷ்

04-09-2021


[1] பெ. மணியரசன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவரும், கட்சியின் கொள்கை இதழான தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியரும், தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும் ஆவார். இந்தியத் தேசியத்தை முற்றிலுமாக மறுத்து தமிழ்த் தேசியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது, பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை (Right to self determination with the right to secede) தமிழ்நாட்டிற்கு வேண்டும் என்றும், தமிழ்நாட்டை மாநிலம் என்று அழைக்காமல் தமிழ்த்தேசம் என்று அழைக்க வேண்டும் என்றும், இந்தியாவைத் தேசம் என்று அழைக்காமல் ஒன்றியம் என்று அழைக்க வேண்டும் என்றும், பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தமிழ்த்தேசக் குடியரசு நிறுவப்பட வேண்டும்

[2] தமிழ்.இந்து, சங்கத் தமிழ் நூல் தொகுப்புக்குதிராவிடக் களஞ்சியம்என பெயர் சூட்டுவதை கைவிட வலியுறுத்தல், செய்திப்பிரிவு, Published : 02 Sep 2021 03:13 AM; Last Updated : 02 Sep 2021 06:46 AM.

[3] https://www.hindutamil.in/news/tamilnadu/711647-maniyarasan-statement.html

[4] தமிழ்.இந்தியன்.எக்ஸ்பிரஸ், தமிழ் சங்க இலக்கியங்களைதிராவிடக் களஞ்சியம்என தொகுப்பது சரியா? தலைவர்கள், எழுத்தாளர்கள் கருத்து, Written By WebDesk

September 2, 2021 12:08:07 am.

[5] https://tamil.indianexpress.com/literature/sangam-literature-and-dravidian-kalanjiyam-controversy-political-leaders-and-writers-scholars-opinion-337927/

திராவிட களஞ்சியம் – தமிழ்-திராவிட சண்டையா, ஆரிய-திராவிட இனப் போராட்டமா, இனமா-இனத்துவமா, இனத்துவமா-இனவெறித்துவமா? 1970 லிருந்து எத்தனை சங்க இலக்கியம் வெளியிடப் பட்டுள்ளது? (1)

செப்ரெம்பர் 5, 2021

திராவிட களஞ்சியம்தமிழ்திராவிட சண்டையா, ஆரியதிராவிட இனப் போராட்டமா, இனமாஇனத்துவமா, இனத்துவமாஇனவெறித்துவமா? 1970 லிருந்து எத்தனை சங்க இலக்கியம் வெளியிடப் பட்டுள்ளது? (1)

திராவிடக் களஞ்சியம் தொகுப்பு வெளியீடு அறிவிப்பு, எதிர்ப்பு: சங்கத் தமிழ் இலக்கியங்களை, எளிய தொகுப்பாக வெளியிடப் போவதாகவும் இதற்கு திராவிடக் களஞ்சியம் எனப் பெயர் சூட்டப்போவதாகவும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருக்கிறார். இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், “சங்கத் தமிழ் நூல்களுக்கு திராவிடக் களஞ்சியம் எனப் பெயர் சூட்டுவது, தமிழ்மொழி, தமிழினம் இரண்டையும் மறைக்கும் செயல்இவ்வாறு பெயர் சூட்டுவதைத் தமிழக அரசு கைவிட வேண்டும்,” என வலியுறுத்தியுள்ளார்[1]. இது குறித்து விகடன் நிருபரிடம் பேசிய அவர், “சங்கத் தமிழ் நூல்கள் எதிலும்திராவிடஎன்ற சொல்லே கிடையாது. தமிழ், தமிழ்நாடு, தமிழகம் என்ற சொற்களே இருக்கின்றன. வரலாற்று உண்மை இவ்வாறிருக்க, வலிந்து சங்கத் தமிழ் நூல்களுக்குதிராவிடக் களஞ்சியம்என்று தி.மு. ஆட்சி பெயர் சூட்டுவதற்கு ஏதோ ஓர் உள்நோக்கம் இருக்க வேண்டும். எது எப்படி இருப்பினும், சங்கத் தமிழ் நூல்களைத்திராவிடக் களஞ்சியம்என்று மக்களிடம் அறிமுகப்படுத்துவது தமிழ் மொழிதமிழினம் இரண்டையும் மறைக்கும் செயலாகும். ‘அவன் கையைக் கொண்டு அவன் கண்ணையே குத்து!’ என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது,” என்றார்[2]. உள்நோக்கம் இருந்தால், மணியரசன் தாராளமாக எடுத்துக் காட்டியிருக்கலாம்.

1970 முதல் 2020 வரை இல்லாத விருப்பம், காதல் மோகம் திடீரென்று வந்துள்ளது ஆச்சரியம் தான்:  19ம் நூற்றாண்டில் ஓலைச் சுவடிகளைத் தேடி, பதிப்பித்து, அச்சில் புத்தகங்களாக வெளிக் கொண்டு வந்திருக்கின்ற கால கட்டத்தில், திராவிடத்துவ வாதிகள், திராவிட இனம்-மானம் பேசும் அரசியல்வாதிகள், அரசியல்வாதிகள் பதவிக்கும், அந்தஸ்த்திற்கும், பலவிதங்களில் ஆங்கிலேயரை எதிர்த்தும்-ஆதரித்தும் வேலை செய்து கொண்டிருந்தனர். நீதி கட்சி, திராவிட கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம் என்று கட்சிதான் பெருகின. உதாரணத்திற்கு சில சங்க இலக்கிய பதிப்பு விசயங்கள் கொடுக்கப் படுகின்றன:

சங்க இலக்கியம்வருடம்பதிப்பாளர் / உரையாசிரியர்
கலித்தொகை1887 சி.வை. தாமோதரம்பிள்ளை
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும்1889உ. வே. சாமிநாதையர்
புறநானூறு1894உ. வே. சாமிநாதையர்
ஐங்குறுநூறு1903உ. வே. சாமிநாதையர்
பதிறுப்பத்து1904உ. வே. சாமிநாதையர்
நற்றிண1915பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர். சென்னை சைவ வித்தியாநுபாலன யந்திரசாலை
குறுந்தொகை1915சௌரிப் பெருமாள் அரங்கனார்
பரிபாடல்                     1918உ. வே. சாமிநாதையர்
அகநானூறு1920கம்பர் விலாசம் இராஜகோபாலய்யங்கார். ராகவையங்கார் (பதிப்பாசிரியர்)

பிறகு மற்ற நூல்கள் பலரால் வெளியிடப் பட்டன[3].

  1. ஆறுமுக நாவலர் சைவ இலக்கிய நூல்களை (ஸ்தல புராணங்கள் உட்பட) வெளியிட்டுள்ளார்.
  2. இலங்கையிலும் பல பதிப்புகள் 19ம் நூற்றாண்டிலிருந்து வெளி வந்துள்ளன.
  3. உ.வே.சாமிநாத ஐயர் பல தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். இன்றும் நூல்கள் பதிவாகிக் கொண்டிருக்கின்றன.
  4. திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்புக் கழகம் செய்த பணியை இது வரை யாரும் விஞ்சியதாகத் தெரியவில்லை.
  5. சமீப காலத்தில் வர்த்தமான பதிப்பகம், எல்லா தமிழ் இலக்கியங்களையும் வெளியிட்டுள்ளது. ஆக, இவற்றை விட, தமிழக அரசு செய்து விட முடியுமா என்று பார்க்க வேண்டும்.  1970 முதல் 2020 வரை இல்லாத விருப்பம், காதல் மோகம் திடீரென்று வந்துள்ளது ஆச்சரியம் தான். ஏனெனில், ஒரு ஆண்டுக்கு ஒரு புத்தகம் என்று வெளியிட்டிருந்தால் கூட 70 புத்தகங்கள் வெளியிட்டிருக்கலாம்[4].

ஆகவே, அப்பொழுதெல்லாம் செய்யாமல், இப்பொழுது, செய்யப் போகிறேன் என்று தினம்-தினம் அறிக்கைகள், திட்டங்கள் வெளியிடுவது தமாஷாக இருக்கிறது.

முரசொலி கொடுத்த விளக்கம் (02-09-2021)[5]: முரசொலியில், “திராவிடம் என்றால் எரிகிறதா?” என்ற தலையங்கத்தில் திராவிடம் மற்றும் தமிழ் பற்றி விளக்கம் கொடுக்கப் பட்டது. ‘திராவிட’ என்பதை வடசொல் என்பது வேர்ச் சொல் அறியாதவர் கூற்றாகத்தான் இருக்க முடியும். ‘திராவிட மொழிநூல் ஞாயிறு’தேவநேயப் பாவாணர் அவர்கள், ‘திராவிடம்’ என்பது தமிழ்ச் சொல்லே என்று தான் நிறுவி உள்ளார். திரவிடம் என்பது தென் சொல்லே என்றுஅவர் நிறுவி உள்ளார். பழைய காலத்தில் நாட்டுப் பெயர்களும், மொழிப் பெயர்களும் பெரும்பாலும் ‘அம்’ ஈறு பெற்றுத் தமிழில் வழங்கின. ஈழம், கடாரம், சீனம், யவனம் தமிழம் -த்ரமிள (ம்) – த்ரமிடன் (ம்) -த்ரவிட (ம்) – திராவிட (ம்) – என்னும் முறையில் தமிழம் என்னும் சொல்லே திராவிடம் என்று திரிந்ததாகும். தமிழம் என்பது – தவிள – தவிட – என்று பிராகிருதத்தில் திரிந்த பின்பு, தமிலி தவிட என்னும் வடிவங்கள் த்ரமில,திரவிட, த்ரவிட என்று வடமொழியிற் திரிந்ததாக, பண்டிதர் கிரையர்கள் கூறுவர். எங்கனமிருப்பினும், தமிழம் என்னும் சொல்லே த்ரவிட என்று திரிந்ததென்பதற்கு எட்டுணையும் ஐயமில்லை,” என்று எழுதி இருக்கிறார் பாவாணர்[6]. தமிழ், திராவிடம், தென்மொழி என்னும் முப்பெயரும் ஒரு பொருட்சொற்களில் தமிழையே குறித்து வந்திருப்பினும் இன்றைய நிலைக்கேற்ப தமிழின் மூவேறு நிலைகளை உணர்த்தற்குரியனவாய் உள்ளன என்றும் சொன்னவர் அவரே. “திரவிட மொழிகளெல்லாம், முதற் காலத்தில் வேறுபாடின்றி அல்லது வேறு படுக்கப்படாது தமிழம் அல்லது திரவிடம் என ஒரே பெயரால் அழைக்கப் பெற்றமை” என்ற அவர், தமிழம் என்னும் பெயரே (த்ரமிளம் -த்ரமிடம் – த்ரவிடம்) திரவிடம் எனத் திரிந்தமை என்கிறார்.

முரசொலி கொடுத்த விளக்கம் (02-09-2021) – திராவிடம் தமிழ் மொழி: முரசொலி விளக்கம் தொடர்கிறது, “தமிழ்தமிழன்தமிழ்நாடுதிராவிட மாடல்நான் திராவிட மரபினத்தைச் சேர்ந்தவன் என்று முதலமைச்சர் ஒலித்து வருவது இரண்டும் ஒரே பொருளைத் தருவதால்தான். இதில் குற்றம் காண எதுவும் இல்லை. வேறு குற்றம் காண முடியாதவர் வேண்டுமானால்திராவிடக் குற்றம்கண்டு வருகிறார்கள். இதுதான் புரட்சிக் கவிஞர்தமிழியக்கம் கண்ட பாவேந்தர்பாரதிதாசன் அவர்களின் கூற்றுமாகும். “நான்மூவேந்தர் நாடெனநவில்வதும் தென் மறவர் நாடென்று செப்பலும் பழந்தமிழ் நாடெனப்பகர்வதும், இந்நாள் வழங்குதிராவிடர் நாடெனவரைவதும் ஒன்றே! அதுதான் தொன்று தொட்டு வென்ரு புகழோங்கு நம் அன்னைநாடு! திராவிடம் என்று செப்பிய தேன் எனில்திருத்தமிழம்எனும் செந்தமிழ்ப் பெயரை வடவர் திரமிளம் என்று வழங்கினர். திரமிளம், பிறகுதிராவிடம் ஆனது. வேட்டியை வடவர் வேஷ்டி எனினும் அவ்வேட்டி திரிந்த வேஷ்டியும் தமிழே! அதுபோல் திருத்தமிழகத்தைத் திராவிடம் என்றால் இரண்டும் தமிழே என்பதில் ஐயமேன்!….உறுதி ஒன்று திராவிட மறவர் நாட்டை மீட்டு வாழ்வதே!” என்றுஎழுதினார் பாவேந்தர்! திருத்தமிழகத்தை மீட்டு வாழ்வதை, ஆள்வதைத்தான்திராவிட மாடல்ஆட்சி என்கிறார் முதலமைச்சர்”.

© வேதபிரகாஷ்

04-09-2021


[1] விகடன், தமிழ் சங்க இலக்கியத் தொகுப்பிற்கு `திராவிடக் களஞ்சியம்எனப் பெயர் சூட்டுவதா?” – பெ.மணியரசன் கேள்வி, கு. ராமகிருஷ்ணன், Published: 01 Sep 2021 1 PM; Updated: 01 Sep 2021 1 PM.

[2] https://www.vikatan.com/government-and-politics/literature/pe-maniyarasan-condemns-the-dmk-government-for-using-the-word-dravidian-instead-of-tamil-heritage

[3]  சுபாஷிணி, சங்க இலக்கியப் பதிப்புகள், ஜூலை 11, 2010.

[4] இதற்கெல்லாம் கோடிகள் செலவழிக்க வேண்டாம், ஆனால், ஒன்றும் நடக்கவில்லை என்பது தான் உண்மை.

[5] புதியதலைமுறை, சங்க இலக்கிய தொகுப்பும், திராவிடக் களஞ்சியமும்: எதிர்ப்புக் காரணங்கள் Vs முரசொலி தலையங்கம், சிறப்புக் களம்,    Web Team Published :02,Sep 2021 06:34 PM.

[6] https://www.puthiyathalaimurai.com/newsview/114613/Murasoli-article.html